For Daily Alerts
Just In
சென்னை மற்றும் புறநகரில் மீண்டும் மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பரவலாக பெய்த மழை..மக்கள் மகிழ்ச்சி- வீடியோ
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவும் விடிய விடிய மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. காலை முதல் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் புறநகரின் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, வளசரவாக்கம், புரசைவாக்கம், தரமணி, வேளச்சேரி, கிழக்கு தாம்பரம், வடசென்னை போன்ற இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதே போல் புறநகர் மற்றும் வட சென்னை பகுதியிலும் தேங்கியிருக்கும் மழை நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Comments
English summary
Again rain started in Chennai. Many places of Chennai faces heavy traffic jam due to rain.