தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் உலுக்கிய மழை.. சென்னையில் வெறும் புழுக்கம் மட்டுமே!
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனாலும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் தணிந்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும் நல்ல மழை கொட்டி வருகிறது. வேலூர் மாவட்டம் சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய ராஜீவ் காந்தியின் ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பல் விவகாரம்.. அன்று என்னதான் நடந்தது?
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.