தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன்: பத்மஸ்ரீ விருது குறித்து மாரியப்பன் பெருமிதம்
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாரியப்பன் நன்றி தெரிவித்துள்ளார்.
சேலம்: பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்தியரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இந்த விருது தமிழகத்திற்கு கிடைத்தாக கருதுவதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த மாரியப்பன் கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.
இதனையடுத்து தற்போது மத்திய அரசு மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்த தெரிவித்துள்ள மாரியாப்பன், தமக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன்.
வெளியில் தெரியாத வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டால் உத்வேகமாக அமையும். மேலும் பத்மஸ்ரீ விருது கிடைக்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என்றும் மாரியப்பன் தெரிவித்தார்.