For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார் மார்க் ஜூக்கர்பெர்க்!

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதானதை அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர்- வீடியோ

    சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதானதை அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த மோசடி குறித்து முக்கியமான பல தகவல்களை அவர் கொடுத்துள்ளார்.

    இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மக்கள்தான் முக்கியம்

    மக்கள்தான் முக்கியம்

    அவர் கொடுத்து இருக்கும் விளக்கத்தில் ''எங்களுக்கு மக்கள்தான் முக்கியம். உங்களுடைய அந்தரங்கங்களை பாதுகாப்பதுதான் எங்களுக்கு முக்கியம். உங்களுடைய தகவல்களை சரியாக பாதுகாக்க முடியவில்லை என்றால், நாங்கள் இந்த நிறுவனத்தை நடத்தவே தகுதி இல்லாதவர்கள்'' என்றுள்ளார்.

    இனிமேல் நடக்காது

    இனிமேல் நடக்காது

    மேலும் ''இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இதுபோன்ற விஷயங்கள் இனி எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க போதிய முயற்சிகள் செய்து வருகிறோம். கண்டிப்பாக இனி இப்படி நடக்காது'' என்றுள்ளார்.

    ஏற்கனவே திட்டம்

    ஏற்கனவே திட்டம்

    மேலும் ''ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்கவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்து இருந்தோம். மக்களுக்கு இந்த விஷயம் கண்டிப்பாக மகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் மீண்டும் எப்போதும் போல பேஸ்புக்கை பயன்படுத்தலாம் என்று உறுதி அளிக்கிறேன்.'' என்றுள்ளார்.

    மன்னிப்பு கேட்டார்

    மன்னிப்பு கேட்டார்

    முக்கியமாக ''இந்த விஷயம் நடந்தது பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கையை குறைத்து இருக்கிறது. பல மக்கள் பேஸ்புக் குறித்து வருத்தமான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Cambridge Analytica illegally used 50 million people Facebook accounts. It did a major role in America election and Brexit. This issue becomes a major one after Channel -4 sting operation video came out. We helped BJP to win Indian elections says Cambridge Analytica in their Indian branch profile. Mark Zuckerberg apologies on Cambridge Analytica scandal issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X