காவி முகமூடியுடன் வெறியாட்டம்... நெல்லை விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு
Recommended Video
நெல்லை: காவி முகமூடியுடன் நெல்லை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் முடிந்தவுடன் சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று நெல்லையில் நடைபெற்றது. அப்போது காவி முகமூடி அணிந்த சிலர் அங்கு கலவரத்தில் ஈடுபட்டனர்.
எனினும் அதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.
Masked, pelting stones during Ganesh chathurthi rally to instigate violence.. Video reportedly from Thirunelveli..@CMOTamilNadu are you seeing this!? Is this what called as Amma Aatchi!?@rajinikanth care for terming them as 'Shammuga vrothis'!?
— Pramod Madhav (@madhavpramod1) September 15, 2018
Shame.. pic.twitter.com/T8zPBzQG83
ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான கலவரங்களில் குறைந்தபட்சம் தடியடி கூட நடத்தாதது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 144 தடை உத்தரவிற்கு பிறகும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.