மசாஜ் சென்டர் மேரி.. 24 வயசுதான்.. ரூமுக்குள் செய்த ஷாக் காரியம்.. கதிகலங்கிய கள்ளக்குறிச்சி
மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்
கள்ளக்குறிச்சி: மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த மேரிக்கு என்னாச்சு என்றே தெரியவில்லை.. திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி.. 24 வயசுதான் ஆகிறது.. இவர் அப்பா பெயர் அந்தோணிசாமி.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் மசாஜ் சென்டருக்கு வேலைக்கு வந்தார்.
அந்த சென்டரில்தான் சுபிஷ் என்ற இளைஞரை சந்தித்தார்.. சுபிஷூக்கு 28 வயதாகிறது.. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.. அதனால், 2 பேரும் கல்யாணமே செய்து கொள்ளாமல், ஒரே ரூமில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடந்தது.. அதில், மேரி வேலை பார்த்த மசாஜ் சென்டரும் ஒன்று.
இறுதியில், அந்த மசாஜ் சென்டரை மூடிவிட்டனர். இதனால் கையில் காசின்றி காதலர்கள் 2 பேருமே தவித்துள்ளனர்.. குடும்பமும் நடத்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் மேரி தன்னுடைய ரூமுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்... இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.. தகவலறிந்து கொடைக்கானல் போலீசார் விரைந்து வந்தனர்.
மேரியின் சடலத்தை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், அந்த ரூமில் 2 பேரும் தண்ணி அடித்திருந்ததற்கான அடையாளம் இருந்தது... பிறகு சுபிஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொல்லும்போது, "எங்களுக்கு வேலை இல்லை.. வருமானமும் இல்லை.. அதனாலேயே கல்யாணத்தைகூட செய்து கொள்ள முடியவில்லை.
தினம் தினம் பண பிரச்சனை இருக்கவும், எங்களுக்குள்ள நிறைய சண்டைகள் வந்து போகும்.. வேலை கிடைத்ததும் கல்யாணம் செய்யலாம்னு முடிவு செய்திருந்தோம்... சொந்த ஊருக்கு போறதுக்கு கூட மேரி கிட்ட பணம் இல்லை.. அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என்று வாக்குமூலத்தில் கூறினார்.
ஊருக்கு போறதுக்கு பணம் இல்லையென்றால், ஒன்றாக சேர்ந்து தண்ணி மட்டும் எப்படி அடித்தார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது? அத்துடன் மேரி தற்கொலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.