தூத்துக்குடி மேயர் தேர்தல்... பாஜக ஜெயலட்சுமிக்கு மதிமுக மா.செ. ஜோயல் வாழ்த்து!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயலட்சுமியை தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.
தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகள் மற்றும் மாநகராட்சியில் காலியாகவுள்ள மேயர் மற்றும் 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மேயர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமியை, பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான மதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மதிமுக, பா.ஜ.க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.