For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்.. இன்று 7-ஆவது நாள்

மதுரை அரசு இராசிசி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அரசு இராசிசி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏழாவது நாளான இன்று மருத்துவமனையின் நுழைவாயிலில் பந்தல் போட்டு போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இடஒதுக்கீடு முறையை ஒழுங்குப்படுத்த கோரி மதுரை மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை வெளிப்படையாக வெளியிட்டு கலந்தாய்வு, இடமாறுதல் செய்ய வேண்டும் என நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

Medical college students protest in Madurai

மேலும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறி காலவரையின்றி மெளன போராட்டம் மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நூதன முறையில் போராடி வருகின்றனர்.

பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி அமைத்து கண்களின் கருப்பு துணிக் கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7வது நாளாக இன்று சவப்பெட்டி தயாரித்து பினம்போல் உள்ளே படுத்துக் கொண்டு தங்கள் போரட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
PG students from Madurai Medical College continues 7 th day protest for regulating 69% reservation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X