ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெடிக்கல் ஷாப்கள் இன்று மூடல்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மருந்தகங்களும் குதித்துள்ளன. இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடப்பட்டிருக்கும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மருந்தகங்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 30000 மெடிக்கல் ஷாப்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மருந்தகங்கள் இன்று மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications