மர்ம மரணமடைந்த மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் உடல் அடக்கம்
Recommended Video
ராமேஸ்வரம்: மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மாணவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மாணவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். இவர் சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவர் விடுதி அறையில் திங்கட்கிழமையன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. தகவலறிந்து அவரின் தந்தை உட்பட உறவினர்கள் சண்டிகருக்கு புறப்பட்டு சென்றனர். அவரின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சண்டீகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் மூலம் அவரது உடல் சண்டீகரில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்ட கிருஷ்ணபிரசாத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.