மதுரையில் கோலாகலத்துடன் மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
Recommended Video
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரதான நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. மீனாட்சி திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந் தேதியன்று தொடங்கியது. புதன்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
9-வது நாளான நேற்று மரவர்ணச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். திக்விஜய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 9.05 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. இத்திருக்லயாண நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்துக்கு பின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருள்கின்றனர். 11-ம் நாள் விழாவாக ஞாயிற்றுக்கிழமை மாலை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.