இரண்டு ஆட்டோ.... ஒரு கார் மோதல்... ஆட்டோ ஓட்டுநர் அநியாய பலி: வீடியோ
மேலூர் ரிங் ரோட்டில் இரண்டு ஆட்டோக்களும் காரும் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மேலூர் அருகே ரிங் ரோட்டில் இரு ஆட்டோக்களும் ஒரு காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலூர் ரிங் ரோட்டில் இரண்டு ஆட்டோக்களும் ஒரு காரும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. அப்போது ஆட்டோவை ஓட்டி வந்த கார்த்திகை ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெரும்பாலான சாலை விபத்துகள் நெடுஞ்சாலைகளில் தான் நடக்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். அதிக வேகம், மது அருந்துவிட்டு வண்டி ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அதிகளவில் நடக்கிறது.