அடேங்கப்பா.. எப்படீல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. நம்மாளுங்க..!
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததும், சாஷ்டாங்கமாக காலி விழுந்து யோகா செய்பவர்கள் நமது அமைச்சர்கள் என சமூக வலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் காலங்காலமாய் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா வெள்ள நீரில் இறங்கி நடந்து செல்வது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வந்தது.
தற்போது அந்தப் புகைப்படத்தை வைத்து புதிய மீம் தயாரித்துள்ளனர். அதில், ஜெயலலிதா மழை நீரில் நிற்பது போன்ற போட்டோவும், அதற்குப் கீழேயே நடிகர் போண்டா மணி நீரில் இருந்து வெளியே வருவது போன்ற போட்டோவும் இடம் பெற்றுள்ளது.
அம்மா: யார்டா நீ தண்ணிக்குள்ளேருந்து வர்ற.உங்க அமைச்சர்தாம்மா, உங்களை கும்புட்டுகிட்டு இருந்தேன், கவனிக்காம மிதிச்சிட்டீங்க... :D :DSuresh Kishore .....
Posted by Sarav Urs on Friday, November 27, 2015
கூடவே, அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வது போல் கருத்தும் வெளியிட்டுள்ளனர். அதில்,
‘அம்மா: யார்டா நீ தண்ணிக்குள்ளேருந்து வர்ற.
போண்டா: உங்க அமைச்சர்தாம்மா, உங்களை கும்புட்டுகிட்டு இருந்தேன், கவனிக்காம மிதிச்சிட்டீங்க... ' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொம்ப டெர்ரரா இருக்கேய்யா உங்க சிந்தனையெல்லாம்..எங்க இருந்துய்யா நீங்க வர்றீங்க??!!!