எல்லாத்துக்கும் காரணம் அந்த மதியழகன்தான்.. எஸ்.வி.சேகர் சொல்வதைப் பாருங்க!
மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்திலும் விஜய் நடிப்பிலும் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படம் பாஜகவினரை அலறவிட்டு வருகிறது. பாஜகவினரின் எதிர்ப்பே படத்திற்கு பெரும் விளம்பரமாக உள்ளது.
இந்நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சென்சார் செய்த படத்தை மீண்டும் சென்சார் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மெர்சல் படம் இத்தகைய பிரச்சினையை சந்தித்துள்ளதற்கு காரணம் சென்சார் போர்டு அதிகாரி மதியழகன்தான் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு படத்தில் தவறான கருத்து உள்ளது என்றால் அதை சரி செய்யத்தான் சென்சார் போர்டு என்றும் எஸ்வி சேகர் கூறினார். மெர்சல் தயாரிப்பாளர் தற்போது காட்சிகளை நீக்குவதாக குறிப்பிட்டுள்ளதால் பிரச்னை முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தின் மூலம் அரசியல் செய்கின்றனர் என்றும் எஸ்வி சேகர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த காப்பி மற்றும் பேஸ்ட் நிபுணர் யார் என கேட்டு மெர்சலை எஸ்வி சேகர் கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.