சென்னையில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி: அமைச்சர் அறிவிப்பு!
சென்னையில் 213 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் 213 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.
ஆண்டு தோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்த தான முகாம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னையில் 213 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்படும் என்றார். இந்த மெட்ரோ ரத்த வங்கி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரத்த வங்கியால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களும் பயனடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரத்த வங்கி பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.