For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் மெட்ரோ சுரங்க ரயில் சேவை தொடக்கம்! -வீடியோ
சென்னையில் கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை மெட்ரோ சுரங்க ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
சென்னை: கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை மெட்ரோ சுரங்க ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் மூன்றாவது கட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்டங்கள் உயர்த்தப்பட்ட பாதையில் செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக சுரங்க ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
English summary
Metro mining train has launched in Chennai today. Central minister Venkaih naidu and Chief minister Edappadi palanisamy have participated in the function.
Story first published: Sunday, May 14, 2017, 13:41 [IST]