காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்தது!
Recommended Video
சென்னை: காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
என்ன முக்கியம்
முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அங்கு 1000க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
தண்ணீர்
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 85.43 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று இரவே அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டுவிட்டது.
என்ன வெள்ளம்
வெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.50 லட்சம் கன அடியாக உயரும் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1.53 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அதிகமாகும்
பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால், காவிரியில் இன்னும் அதிக அளவில் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .