105 அடியை எட்டிய மேட்டூர் அணை.. நாளை பாசனத்திற்காக திறக்கப்படுகிறது!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது.
Recommended Video
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.04 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது இதனால் நாளை மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.
விவசாய பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ளது. காலை பத்து மணிக்கு முதல்வர் அணையை திறக்க உள்ளார். அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.