For Daily Alerts
Just In
மேட்டூர் அணை நீர் திறப்பு நிறுத்தம் – தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு
மேட்டூர்: தமிழகத்தில் பாசனத்திற்காக டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படுவதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 10, 2014 முதல் இன்று வரை 148.7 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கர்நாடகா 199 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட்டிருக்கிறது.
இந்நிலையில், மாநில அரசின் விதிமுறைகளின்படி, பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் ஜனவரி 28 ஆம் தேதியே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக இன்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி, அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியில் 77.3 அடியாக நீர்நிலை இருந்தது.
Comments
mettur dam water pwd announcement சென்னை மேட்டூர் அணை நீர் வரத்து நிறுத்தம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு
English summary
Mettur dam water stopped for delta districts, Tamil Nadu PWD department.
Story first published: Thursday, February 5, 2015, 16:54 [IST]