ரெய்டு: தமிழக முதல்வரை இரவோடு இரவாக சந்தித்த டிஜிபி.. 45 நிமிடம் நீடித்த சந்திப்பு.. பேசியது என்ன?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக டிஜிபி ராஜேந்திரன் நேற்று இரவோடு இரவாக சந்தித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக டிஜிபி ராஜேந்திரன் நேற்று இரவோடு இரவாக சந்தித்துள்ளார்.
நேற்று தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள். மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, இதேபோல பாண்டிச்சேரி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட சோதனை நடந்தது.
டிஜிபி வீடு அலுவலகம்
நேற்று இந்த சோதனையில் தமிழக டிஜிபி ராஜேந்திரனும் சிக்கினார். அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது. இந்தியாவிலேயே ஒரு மாநில டிஜிபி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, அதுவும் அலுவலகம் தொடங்கி அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது இதுவே முதல் முறை ஆகும்.
இரவு முழுக்க
இதில் ஆச்சர்யபட வேண்டிய விஷயம் என்னவென்றால், சிபிஐ நடத்திய இந்த சோதனை இரவு முழுக்க நடந்து இருக்கிறது. அதோடு டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் 25க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை செய்து இருக்கிறார்கள். முக்கிய சிபிஐ அதிகாரிகள், டிஜிபி ராஜேந்திரனிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளார்கள்.
முதல்வரை சந்தித்தார்
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக டிஜிபி ராஜேந்திரன் நேற்று இரவோடு இரவாக சந்தித்துள்ளார். ரெய்டு நடந்து கொண்டு இருக்கும் போதே, சரியாக 1 மணி அளவில் சென்று முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்துள்ளது.
என்ன பேசினார்
இதில் என்ன ஆலோசனை செய்தனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் டிஜிபி ராஜேந்திரன் பதவி விலகுவது குறித்து இதில் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையை அரசு தரப்பு எதிர்பார்க்காத காரணத்தால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.