For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிலாது நபியை முன்னிட்டு 24ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மிலாது நபியை முன்னிட்டு வரும் 24ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் மிலாது நபி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இதையொட்டி வரும் 24ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

Milad un nabi: TASMAC shops to be closed on dec. 24th

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மதுபான(சில்லறை விற்பனை) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின் படி வருகிற 24-ந் தேதி(வியாழக்கிழமை) மிலாதுநபி தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள்(பார்) ஆகியவை அன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை போன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர்.

English summary
Government has ordered all the TASMAC shops in the state to be closed on december 24th ahead of Milad un Nabi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X