For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“பேஸ்புக்” மூலம் காதல் வளர்த்து மாணவியைக் கடத்திய ராணுவ வீரர் கைது!

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூரில் முகநூல் மூலம் காதலித்து கல்லூரி மாணவியைக் கடத்திய இராணுவ வீரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் முத்து. இவர் ஹைதராபாத்தில் உள்ள தரைப்படை இராணுவ பிரிவில் வீரராகப் பணி புரிகிறார். இவரது மனைவி ஷீலா திருப்பத்தூரில் வசித்து வருகிறார்.

Military man arrested in kidnap case

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கொலசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் பிரியதர்ஷினி. இவர் திருச்செங்கோடு அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

பிரியதர்ஷினிக்கும், முத்துவுக்கும் கடந்த ஆறு மாதங்களாக முகநூல் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி பிரியதர்ஷினியை ராணுவ வீரர் முத்து கடத்திச் சென்றதாகக் பிரியதர்ஷினியின் தந்தை கோபால் அளித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் பாலக்கோடு பேருந்து நிலையப் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ வீரர் முத்துவை போலீசார் கைது செய்து அவருடன் இருந்த பிரியதர்ஷினியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

English summary
Military man who got married already arrested for kidnap a college girl in the name of Facebook love.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X