For Daily Alerts
Just In
கிரானைட் முறைகேடு தொடர்பான விரிவான அறிக்கை ஹைகோர்ட்டில் தாக்கல்: சகாயம் பேட்டி
கனிமவள முறைகேடுகளை விசாரிக்கும் ஆணையத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரை : கனிமவள முறைகேடுகளை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணையத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்ததாக அதன் ஆணையர் சகாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட் கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவரது தலைமையிலான குழுவினர் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015- ஆம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம் ஐஏஎஸ், கிரானைடு முறைகேடு தொடர்பான விரிவான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளேன். விசாரணை காலங்களில் பயன்படுத்தப்பட்ட கோப்புகள் மற்றும் ஆவணங்களையும் வரும் 31ம் தேதியன்று ஹைகோர்ட்டில் ஒப்படைப்பேன் என்றும் அவர் கூறினார்.
Comments
English summary
IAS officer Sagayam says that the investigation teams work on minerals and ores illeagal mining in tamilnadu completed.
Story first published: Saturday, August 26, 2017, 15:52 [IST]