விநாயகர் சிலைகளை கரைக்க லாரியில் சென்றபோது விபத்து... ஒருவர் மரணம் - வீடியோ
கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகளைக் கரைக்க மினி லாரியில் எடுத்துச்சென்ற போது அது விபத்துள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
Recommended Video
கிருஷ்ணகிரி: விநாயகர் சிலையை கரைக்க மினி லாரியில் எடுத்துச் சென்றபோது, அது மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நேற்று ஆர்றில் கரைக்க விநாயகர் சிலைகளை மினி லாரியில் ஏற்றிச் சென்றனர். அப்போது மினி லாரி தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அந்த மினி லாரியில் சென்ற எட்டுப் பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், அரசு ஆசிரியர் மதியழகன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வாகனத்தின் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.