என்னாது நரசிம்மராவ் உயிருடன் இருக்காரா?... திண்டுக்கல்லார் கிளப்பிய பீதி
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உயிருடன் இருப்பது போல் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
வேடசந்தூர் : முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உயிருடன் இருப்பது போல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று சரித்தர சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார். இன்று காலை பரமத்தி வேலூரில் பேசிய தம்பிதுரை அப்படியே ஊர் பூரா பேசிவிட்டு மின்னல் வேகத்தில் இந்த பொதுக் கூட்டத்துக்கும் வருவார்.
மதியானம் வேடசந்தூர், மாலையில் புதுக்கோட்டை அதன் பிறகு டெல்லிக்கு சென்றுவிடும் அவர் டெல்லிக்கு போய் சென்றுவிட்டு நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார் என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.
நரேந்திர மோடியுடன் தம்பிதுரை உட்கார்ந்திருப்பார் என்று கூறுவதற்கு பதிலாக நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார் என்று கூறிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எப்போது எங்கு பேசினாலும் ஏதாவது ஒரு ஏழரையை இழுத்து வருவதே திண்டுக்கல்லாரின் வாடிக்கையாக இருக்கிறது என்று கட்சியினரே புலம்புகின்றனர்.