For Daily Alerts
Just In
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பழனிச்சாமி. நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary
TN Minister Edappadi Palanichamy was hospitalised after a heart attack.
Story first published: Sunday, December 14, 2014, 14:26 [IST]