For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம்.. எச். ராஜாவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஷ விதைகள்.. புயல் அறுவடை எச் ராஜாவிற்கு வலுக்கும் கண்டனம்

    சென்னை: விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எச் ராஜாவின் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜெயக்குமார் கண்டனம்

    ஜெயக்குமார் கண்டனம்

    சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, பெரியார் சிலையை உடைப்போம் என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சை ஏற்க முடியாது.

    அமைதி பூங்கா

    அமைதி பூங்கா

    எச் ராஜாவின் கருத்துக்கு எங்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இது பெரியார் மண், புரட்சித்தலைவர் மண். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கக்கூடாது.

    ராஜா வீட்டு பிள்ளையாக

    ராஜா வீட்டு பிள்ளையாக

    அமைதியை சீர்குலைப்பவர்கள் ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

    விஷ விதைகளை தூவி

    விஷ விதைகளை தூவி

    சமூக நீதிக்கான மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதி பூங்காவான தமிழகத்தில் விஷ விதைகளை தூவி, ஆதாயம் தேட வேண்டாம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    English summary
    Minister Jayakumar condemns H Raja for his facebook post against Periyar Statue. He also said action will be taken who is creating violence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X