For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி.. புழல் சிறையில் கம்பி எண்ணுவார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்

அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காமராஜர் பெயரை உச்சரிக்க கூட பாஜகவுக்கு தகுதி இல்லை - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்-வீடியோ

    திருவள்ளூர்: அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 100 கோடிக்கும் மேல்அமைச்சர்களுக்கு லஞ்சபணம் பணம் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட வழங்கும் விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகே எஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமர் மோடி அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை சரமாரியாக விளாசினார்.

    மருமகளை மாமியார் ஆட்டிவைப்பதுபோல்

    மருமகளை மாமியார் ஆட்டிவைப்பதுபோல்

    அப்போது காமராஜர் பெயரை சொல்வதற்குக்கூட பாஜகவிற்கு அருகதை இல்லை. அவரை கொல்ல நினைத்த ஆர்எஸ்எஸ்காரர்கள் மருமகளை மாமியார் ஆட்டிவைப்பது போல் பாஜகவை ஆட்டுவிக்கின்றனர்.

    பாஜகவுக்கு தகுதியில்லை

    பாஜகவுக்கு தகுதியில்லை

    காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட அவர்களுக்கு தகுதி இல்லை. பட்ஜெட் நூறு கோடிபணத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் காமராஜர்.

    ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம்

    ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம்

    ஒரு நாளைக்கு 100 கோடிக்கும் மேல் அமைச்சர்களுக்கு லஞ்சபணம் பணம் வருகிறது. இதுதான் காங்கிரஸ் முதல்வருக்கும் மற்ற முதல்வருக்கும் உள்ள வித்தியாசம்.

    சிறை செல்வது உறுதி

    சிறை செல்வது உறுதி

    காங்கிரஸ் தமிழகத்தில் இல்லை அழிந்துவிட்டது என கூறும்
    அமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி. அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் கம்பி எண்ணுவார்.

    வீட்டிற்கு போவது உறுதி

    வீட்டிற்கு போவது உறுதி

    மோடி வீட்டிற்கு போவது உறுதியாகிவிட்டது. அவரின் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள்
    நாட்டுக்கு நல்லது செய்வது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தி என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.

    உரிய இழப்பீடு

    உரிய இழப்பீடு

    8 வழி சாலை திட்டத்தினை வரவேற்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை வழங்கி வேறு இடத்தில் தண்ணீர் வசதியுடன் விவசாயம் மேற்கொள்ள நிலங்களை வழங்கிடவேண்டும். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

    English summary
    Tamilnadu congress former leader EVKS Elangovan has said Minister Jayakumar definetly will go to prison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X