For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரம்: தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பு என்பது தவறானது.. ஜெயக்குமார் விளக்கம்!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவை சந்திக்க மறுப்பதாக கூறுவது தவறு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் சொன்னது தவறு- ஜெயக்குமார்- வீடியோ

    சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழுவை சந்திக்க மறுப்பதாக கூறுவது தவறு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழக குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக முதல்வர் கூறினார் என்று தெரிவித்தார்.

    ஜெயக்குமார் விளக்கம்

    ஜெயக்குமார் விளக்கம்

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஸ்டாலின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

    ஜெ. உண்ணாவிரதம்

    ஜெ. உண்ணாவிரதம்

    அப்போது பேசிய அவர் காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா என்றும் காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற உண்ணாவிரதம் மேற்கொண்டவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.

    ஜெயக்குமார் மறுப்பு

    ஜெயக்குமார் மறுப்பு

    மேலும் காவிரி விவகாராத்தில் பிரதமர் மோடியை சந்திக்க தொடர்ந்து நேரம் கேட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழக குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக ஸ்டாலின் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    பிரதமர் சந்திப்பார்

    பிரதமர் சந்திப்பார்

    மேலும் நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தியுங்கள் என்றுதான் பிரதமர் மோடி கூறியுள்ளார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பின் பிரதமர் சந்திப்பார் என நம்புவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    அவசரப்பட வேண்டாம்

    அவசரப்பட வேண்டாம்

    மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்த நிலையில் 2 வாரங்கள் தான் முடிந்துள்ளது என்றும் இன்னும் 4 வாரங்கள் உள்ளது என்றும் கூறிய ஜெயக்குமார் அதற்குள் அவசரப்பட்டு எந்த நிலைப்பாடும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

    English summary
    Minister Jayakumar has refused that Stalin accusation that PM Modi not meeting Tamilndau team on the Cauvery issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X