For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமது எம்ஜிஆர் பத்திரிகை நிறுவனத்தை மீட்டே தீருவோம்... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

நமது எம்ஜிஆர் பத்திரிகையை மீட்க சட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட நமது எம்ஜிஆர் பத்திரிகை டிடிவி தினகரன் தரப்பிடம் இருந்து மீட்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பொதுக் குழுவை கூட்டுவது தொடர்பாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை தினகரனின் நியமனம் செல்லாது, பொதுக் குழு, செயற்குழு கூட்டுவது, ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ்களை தினகரன் தரப்பில் இருந்து மீட்பது, அதிமுக ஆட்சியை தக்க வைப்பது உள்ளிட்டவையாகும்.

Minister Jayakumar says about resolutions

இதுகுறித்து மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பொதுக் குழு கூட்டம் எப்போது நடத்துவது என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். நமது எம்ஜிஆர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

எனவே நமது எம்ஜிஆர், ஜெயா டிவி ஆகியவற்றை சட்டபடி மீட்க நடவடிக்கை எடுப்போம். கூட்டத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர் என்றார் ஜெயக்குமார்.

English summary
Minister Jayakumar says that Namadhu MGR was started by Jayalalitha, we will approach legally to get it back
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X