என்னாது அதிமுகவால் ஆபத்தா... ஸ்டாலினால்தாங்க தமிழகத்துக்கு ஆபத்து... அமைச்சர் ஜெயக்குமார் கொதிப்பு
அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்றும் ஸ்டாலின்தான் தமிழகத்துக்கு ஆபத்து என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுகவால் தமிழகத்துக்கு ஆபத்து என்று ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் ஸ்டாலினால்தான் தமிழகத்துக்கு ஆபத்து.
ஆபத்து இல்லை
அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து என ஸ்டாலின் கூறுவது தவறு. இந்த கருத்தை அவர் கண்ணாடி முன் நின்று சொல்லிக் கொள்ளட்டும் அதிமுக ஆட்சியில் யாருக்கும் ஆபத்து இல்லை.
அமலில் இருக்கும்
எல்லோருக்கும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறது. பிரதமரை யார் சந்தித்தாலும் காவிரி ஆணையம் உத்தரவுதான் அமலில் இருக்கும்.
ஏற்க முடியாது
தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை ஆணையம் கண்துடைப்பு என்பதை ஏற்க முடியாது.
வழக்கு பதிவு
வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை அரசு அனுமதிக்காது. மன்சூர் அலிகான் பேசியது வன்முறையான பேச்சு. எனவேதான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.