எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை நிச்சயம்- அமைச்சர் ஜெயக்குமார்
எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஆளுநர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு கேள்வி எழுப்பிய பெண் நிருபர் லட்சுமியின் கன்னத்தில் ஆளுநர் தட்டினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்த நிருபர் தனது கொதிப்பான உணர்வுகளை ஆளுநருக்கு கடிதம் மூலம் எழுதினார்.
இதையடுத்து ஆளுநரும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான பதிவை எஸ் வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து எஸ்வி சேகரும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் நேற்றைய தினம் எஸ் வி சேகரின் கருத்தை கண்டித்து அவரது வீட்டின் மேல் கல்வீசி தாக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் நீடித்தது.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் சட்ட வழி படி நடவடிக்கை. தனிமனித உரிமை மீறப்பட்டால் நடவடிக்கை உறுதி அளிக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.