For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்.... ஆடிட்டர் குருமூர்த்தி என்ன தேவதூரா? அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறிய துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என கூறிய துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, பாஜகவும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் எனக் கூறியிருந்தார். மேலும் திமுக இளைஞர்களைக் கவர முடியாது; ஆர்.கே.நகரில் தினகரனிடம் திமுக விலை போய்விட்டது எனவும் விமர்சித்திருந்தார் குருமூர்த்தி.

Minister Jayakumar slams Gurumurthy

அவரது இந்த பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், திமுக தொடர்பாக குருமூர்த்தி தெரிவித்த கருத்துடன் உடன்படுகிறேன்.

குருமூர்த்தி என்ன தேவதூதரா? அவர் சொல்கிறபடியெல்லாம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறாது. மக்கள் இந்த ஆட்சியே தொடர விரும்புகின்றனர் என்றார்.

English summary
Tamilnadu Minister Jayakumar slammed Thuglak Editor Gurmuruthy for his comments against the Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X