இதுக்காகதான் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறாரா? அமைச்சர் அடடே விளக்கம்
டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது.
இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே டிடிவி தினகரன் முதல்வராக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டினார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
இதற்கு பதிலடி கொடுத்த டிடிவி தினகரன், துணை முதல்வர் ஓபிஎஸ் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார், நிறைய பொய் சொல்கிறார் என சரமாரியாக சாடினார்.
காளான்கள் முளைக்கும்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை வெளுத்து வாங்கினார். டிடிவி தினகரன் போன்ற காளான்கள் முளைக்கும்.
சொப்பனத்தில் காணும் அரிசி
டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போட்டு வருகிறார். ஒரு பழமொழி கூறுவார்கள் 'சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோற்றிற்கு உதவாது'.
வாய்க்காலை தாண்ட வேண்டும்
கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் அதற்கு கால் இருக்க வேண்டும். முதலில் வாய்க்காலை தாண்ட வேண்டும். வாய்க்கால் தாண்டவே முடியாதவர்கள் எப்படி சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம். இவ்வாறு கடுமையாக விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.