சிவாஜி கணேசன் சினிமா பாடல்களைப் பாடி அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் 'அட மெல்ல நட மெல்ல நட' உள்பட சில பாடல்களைப் பாடி அசத்தினார்.
சென்னை: சென்னை அடையாறில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜியின் சினிமா பாடல்களைப் பாடி அசத்தினார்.
சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், சத்யராஜ், விஷால் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது, சிவாஜி நடித்து புகழ்பெற்ற பாடல்களான, 'அட மெல்ல நட மெல்ல நட' உள்பட சில பாடல்களை பாடினார்.
மேலும் சிவாஜியின் வசன உச்சரிப்பால் தான் தன்னால் தமிழை மிகச் சரியாக உச்சரிக்கவும் பேசவும் முடிகிறது. என் உச்சரிப்புக்கு உத்வேகமாக இருந்தவர் சிவாஜி கணேசன் எனக் கூறினார்.
மேலும், சிவாஜியின் மணி மண்டப திறப்பு விழா ஒரு பண்பாட்டு திருவிழா எனவும் கூறினார். அதன்பின்பு, துணை முதல்வர் ஓபிஎஸ் தன் உரையை ஆரம்பிக்கும் போது அமைச்சர் ஜெயக்குமார் நல்ல நகைச்சுவை நடிகர் எனவும் குறிப்பிட்டார்.