பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி 15 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 மாதங்களாக மயக்க ஊசி போட்டும் போதை ஊசி போட்டும் சிறுமிக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அரசு நடவடிக்கை
அப்போது பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
துணிச்சலுடன் புகார்
குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் குற்றங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் கூறினார். பாலியல் கொடுமைகள் நடந்தால் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாற்றி மாற்றி பேசுகிறார்
மேலம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குகுமார் முட்டை கொள்முதல் விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மாற்றி மாற்றி பேசுகிறார் என்றார். முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற அவர் பின்னர் நான் அப்படி கூறவே இல்லை என்கிறார் என்றும் கூறினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்
ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு முட்டை கொள்முதல் செய்தால் ரூ. 5000 கோடிக்கு எப்படி முறைகேடு நடக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பொன் ராதாகிருஷ்ணன் முன்வைக்கக் கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.