For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்ட்ராய்டு போன்கள் உள்ள "பரம ஏழைக்கு" உதவிகளை வழங்கினாரா அமைச்சர் கடம்பூர் ராஜூ? வைரலாகும் போட்டோ

ஆன்ட்ராய்டு போன்கள் வைத்துள்ள பெண்ணுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்குவது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆன்ட்ராய்டு போன்கள் வைத்துள்ள பெண்ணுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்குவது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், குறிப்பிட்ட ஆண்டு வருமானத்துக்குள் இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

Minister Kadambur Raju gave welfare projects for poor people in TN

இநவை குறித்த சான்றிதழ்கள் மாவட்ட நிர்வாகத்தினரால் சரிபார்க்கப்பட்டு நலத்திட்ட உதவிக்கு பரிந்துரைக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு விழாவில் அமைச்சர்கள் நலத்திட்டங்களை வழங்குவர்.

அதுபோல் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு ஊரில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதில் நலத்திட்டத்தை பெறும் பெண் பயனாளியின் இடுப்பில் இரு ஆண்டிராய்டு போன்கள் வைக்கப்பட்டது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏழைகளுக்கான நலத்திட்டத்தில் ஆன்ட்ராய்டு போன் வைத்துள்ள பரம ஏழைக்கு நலத்திட்டமா என்பது போல் கருத்துகளும் உலா வருகின்றன. மேலும் இது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமாக இருக்கலாம் என்றும் அந்த பெண்ணின் தாய் ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பது தவறா என்றும் கருத்துகள் பரிமாறப்படுகின்றன.

மேலும் இந்த காலத்தில் ஆன்ட்ராய்டு போன்களின் விலை மிகவும் மலிவாக இருந்து வரும் நிலையில் அதை வாங்கிக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த பெண்ணின் அந்தரங்கம் தெரிவது போல் யாரோ புகைப்படம் எடுத்து வேதனை அளிப்பதாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.

English summary
Minister Kadambur Raju gave welfare projects for the poor in someplace. But a photo which the beneficiary who got the welfare assistance has 2 Android phones. Photo goes Viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X