மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தை தூண்டுகிறார் கமல்ஹாசன்: அமைச்சர் கடம்பூர் ராஜூ அட்டாக்
மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தை நடிகர் கமல்ஹாசன் தூண்டுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.
சென்னை: மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தைத் தூண்டுகிறார் கமல்ஹாசன் என அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடியுள்ளார்.
இந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது பாஜக.
அதேநேரத்தில் இந்து தீவிரவாதம் என்ற சொல்லை கமல்ஹாசன் தவிர்த்திருக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்துத்துவா தீவிரவாதம் என கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கலாம் எனவும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் மதவாதத்தை கமல்ஹாசன் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மழைநிவாரணப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை குறைகூறாமல் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார் கடம்பூர் ராஜூ,.