For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாஸ் அரைவேக்காடு.. அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கு!

கருணாஸ் அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கருணாஸ் அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ கருணாஸ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நான் அடித்துவிடுவேன் என பயப்படுகிறார் என்ற அவர், காவல்துறை அதிகாரிகளையும் ஏக வசனத்தில் விமர்சித்தார்.

Minister Kadambur Raju slams MLA Karunas

மேலும் சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் கருணாஸ். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கருணாஸ் மட்டுமல்ல அவதூறு பரப்பும் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.

மேலும் கைது நடவடிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடக்கும். கருணாஸ் அரசியலை புரிந்து கொள்ளாமல் அரைவேக்காடு போல் பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

English summary
Minister Kadambur Raju slams MLA Karunas for his speech. Karunas threatened CM and Police officials on the meeting on 16th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X