For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேஷன் கார்டுகள் பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்படாது- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கார்டுகளை 3 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    3 மாதம் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால்...குடும்ப அட்டை ரத்து- வீடியோ

    சென்னை: ரேஷன் கார்டுகளை 3 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்பட மாட்டாது, அந்த கார்டுகளுக்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என்றார் அமைச்சர் காமராஜ்.

    ரேஷன் கார்டுகளை 3 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தாவிட்டால் அதை ரத்து செய்யுமாறு மத்திய உணவு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

    Minister Kamaraj says that there will be no cancellation of Ration cards

    இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் உணவுத் துறை மீதான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன், ரேஷன் கார்டு பயன்பாடு குறித்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவுரையை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினார்.

    அப்போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், ரேஷன் கார்டுகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்பட மாட்டாது. அதற்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

    English summary
    Food civils Supply Minister Kamaraj in Assembly says that no ration card will be cancelled if they are not used continuous for 3 months.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X