ரசாயனம் கலக்கவில்லை என நிரூபிக்க தயாரா.. தனியார் பால் நிறுவனங்களுக்கு அமைச்சர் சவால்!
பாலில் ரசாயனம் கலக்கவில்லை என நிரூபிக்க தயாரா என தனியார் பால் நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜேந்தி பாலாஜி சவால் விட்டுள்ளார்
சென்னை: பாலில் ரசாயனம் கலக்கவில்லை என நிரூபிக்க தயாரா என்று அமைச்சர் ரஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தெரிவித்திருந்ததார். அவரது இந்த கருத்து தற்போது பூதகரமாகியுள்ளது.
அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. தாங்கள் பாலில் ரசாயனத்தை கலக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.
தயிரையே பாலாக்குகின்றன
இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது தனியார் பால் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குகின்றன என்று அவர் குற்றம்சாட்டினார்.
கெடாமல் இருக்க ரசாயனம்
பால் கெடாமல் இருக்க ரசாயனம் கலக்கப்படுவதகாவும் அவர் கூறினார். ரசாயனம் கலக்கப்படும் பால் உடல் நலத்திற்கு கேடானது என்றும் அவர் தெரிவித்தார்.
நிரூப்பிக்க முடியுமா?
மேலும் தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை என நிரூபிக்க தயாரா என்றும் அவர் சவால் விடுத்தார். சமூக ஆர்வலர்களை தங்கள் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பால் தயாரிக்கும் முறையை காண்பிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆடிப்போயுள்ள தனியார் நிறுவனங்கள்
ரசாயனம் கலப்பதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். அமைச்சரின் இந்த பரபர குற்றச்சாட்டுகளால் தனியார் பால் நிறுவனங்கள் ஆடிப்போயுள்ளன.