தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
திமுகவிற்கு எதிராக கடுமையாக பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்து பயங்கரவாத உருவாகும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பேசியிருந்தார். அமைச்சரின் பேச்சு கடும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரது சொந்த கருத்து என்றார்.
இதற்கிடையே ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் திமுக சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டியார் எழுதிய நூலில் அப்படி என்ன இருந்தது.. திமுகவை அதிர வைத்த ராமதாஸின் புது ஆயுதம்
இந்த சூழலில் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தார்.அப்போது பால் உற்பத்தியை பெருக்குவது தொடர்பாகவும், பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக என்ன தகவல் என்பது தெரியவில்லை.