For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டை பார்க்கதான் நாங்க இருக்கோமே.. நடிகர்கள் வந்து என்ன பண்ணப் போறீங்க? அமைச்சர் கேள்வி!!

நாட்டை பார்க்க நாங்கள் இருக்கும் போது நடிகர்கள் வந்து என்ன செய்யயப்போகிறார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டை பார்க்க நாங்கள் இருக்கும் போது நடிகர்கள் வந்து என்ன செய்யயப்போகிறார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. விழாவில் பேசிய விஜய் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்க்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். ப

சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என தெரிவித்தார்.

முயற்சி பலிக்கவில்லை

முயற்சி பலிக்கவில்லை

இந்நிலையில் நடிகர் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் எப்போது அரசியலில் குதிக்கலாம் என காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. விஜய் அரசியலில் குதிக்க அவரது தந்தை வலையெல்லாம் கட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

எம்ஜிஆராக நினைக்கிறார்

எம்ஜிஆராக நினைக்கிறார்

ஆனால் விஜய்க்கு அரசியலில் குதிக்க பயம். தைரியம் இருந்தால் விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பித்தால் அவர் சமத்து. இரண்டு ரசிகர்கள் ஆதரவாக பேசியதால் விஜய் தன்னை எம்ஜிஆர் போல் எண்ணிக்கொண்டிருக்கிறார்.

நாட்டை நாங்கள் பார்க்கிறோம்

நாட்டை நாங்கள் பார்க்கிறோம்

புரட்சித்லைவர் எம்ஜிஆருக்கு இணையாக இந்த நாட்டில் யாரும் இல்லை. சினிமாவில் வேஷம் போடுவதுதான் உங்கள் வேலை. அதனை சரியாக செய்யுங்கள். நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்.

வேஷம் கட்டலாம்

வேஷம் கட்டலாம்

மக்கள் உங்களிடம் சொன்னார்களா, விஜய் சார் நாட்டில் எதுவுமே சரியில்லை நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று? முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்கிறார். முதல்வராக வேஷம் கட்டலாம். அதை மக்கள் ரசிப்பார்கள்.

தூக்கம் இல்லை

தூக்கம் இல்லை

முதல்வராக செயல்படுவது சாதாரண காரியமல்ல. எங்களுக்கு சாப்பாடும் இல்லை தூக்கமும் இல்லை. எப்போதும் மக்கள் பணிதான்.

மனிதர் அல்ல புனிதர்

மனிதர் அல்ல புனிதர்

நீங்கள் ஒரு மணி நேரம் டயலாக் பேசி விட்டு 3 மணி நேரம் கேரவனில் தூங்குவீர்கள். எம்ஜிஆர் என்ன செய்தார் என நீங்கள் கேட்கலாம், எம்ஜிஆர் மனிதர் அல்ல புனிதர். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.

English summary
Minister RB Udhayakumar has reacted to Actor Vijay. RB Udhayakumar says we will take care of the Country you carry on your duty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X