For Daily Alerts
Just In
அடடா.. சரியா "பார்க்காமல் "ஜெயலலிதான்னு பேர் வச்சுட்டாரே செங்கோட்டையன்!
கோபி: ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க சொன்னால் ஜெயலலிதா என அமைச்சர் செங்கோட்டையன் பெயர் சூட்டியதால் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் தொகுதி வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார்.
அப்போது செல்வராஜ்- பிரியா தம்பதியின் 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அமைச்சரிடம் கொடுத்தனர். அப்போது அவர் ஜெயலலிதா என பெயரிட்டார். உடனே அருகிலிருந்தவர்கள் அது ஆண் குழந்தை என்றனர்.
இதையடுத்து சிரித்துக் கொண்டே அக்குழந்தைக்கு ராமசந்திரன் என எம்ஜிஆரின் பெயரை சூட்டினார். குழந்தை ஆணாஸ பெண்ணா என கூட கேட்காமல் பெயர் வைத்த சம்பவம் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது.
Comments
English summary
Minister Sengottaiyan names Jayalalitha for male baby in Andiyur. After he realise his mistake then he names Ramachandran.
Story first published: Wednesday, April 3, 2019, 18:09 [IST]