கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியான விவகாரம்: விசாரணைக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவு
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரில் பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை அவர்கள் தவறுதலாக மிதித்தனர்.
இதில் சகோதரிகளான 2 சிறுமிகளும் படுகாயமடைந்தனர். இதையடுத்து 2 சிறுமிகளும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
மின் கம்பி அறுத்தது குறித்து புகார் அளித்தும் மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மின்வாரிய ஊழியர்களை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிறுமிகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க மின்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார். மேலும் தவறு செய்த மின்வாரிய ஊழியர்கள் மீது விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி உறுதி தெரிவித்தார்.
புகார் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.