For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதை நிறுத்த வேண்டும்.. எம்எல்ஏ பழனியப்பன்

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

தருமபுரி: ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ பழனியப்பன் எச்சரித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அண்மையில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Ministers to stop talking about Jayalalitha death: MLA Palaniyappan

இந்நிலையில் எம்எல்ஏ பழனியப்பன் தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரன் அணியிலிருந்து வெளியேற வலியுறுத்தி தனக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறினார்.

என்ன நெருக்கடி கொடுத்தாலும் உண்மையான தொண்டர்களை கொண்ட அதிமுக பக்கம் தான் இருப்போம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தன்மேல் போடப்பட்டுள்ள வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் பழனியப்பன் கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து மாறி மாறி பேசி வருவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

English summary
Dinakaran support MLA Palaniyappan warns ministers to stop talking about Jayalalitha death. He said that Whatever the crisis, we will be on the side of the ADMK with real volunteers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X