For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டுக்கல்லில் பிளஸ் 2 மாணவி மீது ஆசிட் வீச்சு

By Siva
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவி மீது மர்ம நபர் ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்தவர் காயத்ரி. பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு அவரின் வீட்டில் மின்தடை ஏற்பட்டது.

Miscreant throws acid at a school girl

இதையடுத்து காயத்ரி தனது குடும்பத்தாருடன் சென்று உறவினர் ஒருவரின் வீட்டில் தூங்கினார். அதிகாலை காயத்ரி வலி தாங்க முடியாமல் அலறும் சப்தம் கேட்டு அனைவரும் கண் விழித்தனர்.

அப்பொழுது பார்த்தால் காயத்ரியின் தலை முடி கருகியிருந்தது. உடனே அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Miscreant threw acid at a school girl who was sleeping in her relative's house in Dindigul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X