நெல்லை மாநாட்டில் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு அறிவியல் அறிஞர்களுக்கான ஷிஹாப் தங்ஙள் விருது!
நெல்லையில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் அறிவியல் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு ஷிஹாப் தங்ஙள் விருது வழங்கப்பட்டது.
திருநெல்வேலி: நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் அறிவியல் அறிஞர்களுக்கான "ஷிஹாப் தங்ஙள்" விருது அறிவியல் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட்டில் நெல்லை கண்ணன், பேராசிரியர் நாகூர் ரூமி என்ற முகமது ரபி, பேராசிரியர் அமுதன் அடிகளார் ஆகியோருக்கு சிராஜூல் மில்லத் விருது வழங்கப்பட்டது. அறிவியல் அறிஞர்களுக்கான "ஷிஹாப் தங்ஙள்" விருது அறிவியல் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர். அறிவியல் தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதால் எம்.ஜே.எம். இக்பாலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.