ஊர் ஊரா சுற்றுகிறார் ஸ்டாலின்... இப்ப டெபாசிட்டே போச்சே... அழகிரி அதகளம்
ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றுகிறார். இப்படி இருந்தால் கட்சி எப்படி ஜெயிக்கும்? இப்ப டெபாசிட்டே போச்சே என்று கேட்டுள்ளார் மு.க. அழகிரி.
Recommended Video
சென்னை: ஸ்டாலின் செயல்படாமல் எல்லாம் இல்லை, அவர் ஊர் ஊராக சுற்றுகிறார், ஆனாலும் என்ன பிரயோசனம், இப்ப டெபாசிட்டே போச்சே என்று கேட்டுள்ளார் அவரது அண்ணன் அழகிரி.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இது குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். இது வேறு எதற்கோ போடப்பட்ட ஸ்கெட்ச் என்று திமுகவினர் கூறினாலும் அழகிரியின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது.
படுதோல்விக்குக் காரணம் ஸ்டாலினும், அவரது செயல்பாடுகளும்தான் என்று கூறியுள்ளார் மு.க. அழகிரி. கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ரிங் மாஸ்டர்
கருணாநிதி நன்றாக களப்பணியாற்றுவார். அவர் ஆக்டிவாக இருக்கும் வரை திமுக ஜெயித்துள்ளது. போன தேர்தலில் 89 சீட்டுகளை வென்று எதிர்கட்சியாக இருந்தது. இப்போது படுதோல்வியடைந்துள்ளது.
எல்லோருக்கும் என்ன வேலை
எல்லோருடனும் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டனர். என்ன வேலை செய்தார்கள்? அதை மேற்பார்வை பார்த்தது யார்? கருணாநிதி அதிகாலை 2மணிக்கு எழுந்து களத்திற்கு போவார். இப்போது யாராவது அப்படி இருந்தார்களா?
ஸ்டாலின் பணி
ஸ்டாலின் ஊர் ஊராக போனார். அதைத்தவிர வேறு என்ன செய்தார். ஜீப்பில் போனால் மட்டும் போதுமா? அவர் பார்த்த வேலைதான் ஆர்.கே.நகரில் தெரிந்து விட்டதே. இது ஒன்று போதாதா?
இது அவமானம் இல்லையா?
அதிமுக, திமுக மீது உள்ள வெறுப்புதான் தினகரனுக்கு ஓட்டாக விழுந்துள்ளது. திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்கலையே இது அவமானம் இல்லையா? திமுகவினர் காசுக்கு விலை போய்விட்டதாக கூறுவது அவர்களுக்கு
வலிக்காதா? யார் யாரையோ பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தால் கட்சி எப்படி உறுப்படும் என்றும் கேட்டுள்ளார் அழகிரி.