அண்ணா பல்கலை. துணைவேந்தராக கர்நாடகா சூரப்பா நியமனம்- தமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்: ஸ்டாலின்
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவின் சூரப்பா நியமனத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்திருப்பது தமிழகத்தின் தன்மானத்தின் மீதான தாக்குதல் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமிக்கக் கூடாது என்பது கல்வியாளர்களின் வலியுறுத்தல். ஆனால் இதைப்பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல் கர்நாடகா சூரப்பாவையே துணைவேந்தராக நியமித்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
— M.K.Stalin (@mkstalin) April 5, 2018
நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) April 5, 2018
இது குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது சரியல்ல. ஆளுநர் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.